வைகல்லூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான சோமன், வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் பார்ப்பது குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மன உளைச்சலுக்கு ஆளான அவர், அன்று இரவு விஷம் குடித்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சோமன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
