நித்திரவிளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதை அடுத்து கொல்லங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா என்பது குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














