நித்திரவிளை அருகே பாப்பான்பழஞ்சி பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ராஜன் (57) தனது மகளுக்கு வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த அவரது மகன் ரதீஷ் (30) தகாத வார்த்தைகள் பேசி, வீட்டை இடித்து சூறையாடியுள்ளார். தந்தையை கம்பால் தாக்கி காயப்படுத்திய ரதீஷ், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ரதீஷை கைது செய்தனர்.














