Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை: மீன்பிடி தொழிலாளி மீது தாக்கு – வழக்கு

நித்திரவிளை: மீன்பிடி தொழிலாளி மீது தாக்கு – வழக்கு

0

பூத்துறை, காருண்யபுரம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சைலன் (28), நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்குச் செல்ல ஆட்டோவுக்காக சாலையோரம் காத்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மில்டன் (26) என்பவர் பைக்கில் வந்து ஏன் நிற்கிறாய் எனக் கேட்டு தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சைலன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நித்திரவிளை போலீசார் மில்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version