பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த உரையாடலின் போது, இந்தியா – இஸ்ரேல் இடையிலான முக்கிய கூட்டாண்மையை ஆய்வு செய்த இரு தலைவர்களும், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதியேற்றனர். மேற்கு ஆசிய போர் சூழல் குறித்துப் பேசிய இரு தலைவர்களும், தொடர்ந்து தொடர்பில் இருப்பது என முடிவு செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய இந்தப் போர், ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தீர்வின்றி நீடித்து வருகிறது.















