நாகர்கோவில் கோட்டார் சோழவர் தெருவைச் சேர்ந்த 39 வயதான தொழிலாளி ராமசாமி, அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புதன்கிழமை மாடிப்படியில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














