கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கடன் தொல்லையால் மனமுடைந்த தொழிலாளி ஞான சுபின் (24) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பழ வியாபாரி ஞான ராஜனின் மகனான இவர், பலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் இந்த துயர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.














