சுசீந்திரம் மெயின் சாலையில் நேற்று மாலை பலத்த காற்றில் தென்னை மரம் முறிந்து வாகை மரக்கிளையில் விழுந்தது. இதனால் இரு மரங்களும் நடுச்சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.