கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் வரவில்லை. இதன் விளைவாக, மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஜல்லி, எம் சாண்ட் போன்றவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதோடு, அவற்றின் விலையும் உயரும் என அஞ்சப்படுகிறது.














