மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று காலை அந்தப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிதறால் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி எமிலி (47) என்பவர் நடத்திவரும் கடையில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையின்போது அங்கு ரூபாய் 3 ஆயிரத்து 900 மதிப்பான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து எமிலி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Latest article
இறச்சகுளத்தில் விபத்துக்குள்ளான டாரஸ் லாரி
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் வழியாக கனிமங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேற்று தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளக்கரை புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை அங்கிருந்து...
நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49), தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி...
குருந்தன்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி
குளச்சல், குருந்தன்கோடு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. முதலமைச்சர்...














