கடந்த 2 ஆண்டுகளாக முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட 86 ஒருநூறாம்வயல் – மார்த்தாண்டம் பேருந்து சேவையை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து கழகம் மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆறுகாணி, பத்துகாணி, அணைமுகம், ஒருநூறாம்வயல் பகுதி மக்கள் காலை 3.45 மணி முதல் 7.45 மணி வரை பேருந்து இன்றி அவதிப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் உடனடியாக பேருந்து சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.














