மார்த்தாண்டம் குறும்பேற்றி அரங்கத்தில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், மார்த்தாண்டம் சப் டிவிஷன் உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஎஸ்பி வலியுறுத்தினார். பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு ஒதுக்குப் புறமான இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிலர் புகார் தெரிவித்தனர். அதற்கு முறையாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.














