மார்த்தாண்டம்: மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

0
191

பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினபாய் (68). இவர் தற்போது தனது மகள் புனிதா (39) என்பவர் வீட்டில் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்தார். ரத்தினபாய் நீரிழிவு நோய் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். நேற்று மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரத்தினபாய் இறந்து விட்டதாகக் கூறினார்கள். மகள் புனிதா அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here