விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள், சென்னித்தோட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அரசு மானிய விலையில் படகுகளுக்கு வழங்குகின்ற சுமார் 500 லிட்டர் மண்ணெண்ணெயை கடத்திச் சென்ற மினி டெம்போவை காப்புக்காடு பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அதிகாரிகள் மண்ணெண்ணெயைப் பறிமுதல் செய்து அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். வாகனம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.