மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், அதிவேகமாகச் சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஒன்றன் பின் ஒன்றாக 7 வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள் எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உடைந்த வாகனங்கள், காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சிகள், போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வருகை ஆகியவை நெஞ்சை உலுக்கும் விதமாக உள்ளன.














