மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (72). கொத்தனார். இவரது வீட்டு அருகில் உள்ள ஜெகதீஷ் (50) என்பவர் 6 நாய்களை வளர்த்து வருகிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெகதீஷ் மற்றும் அவரது மகன் கிப்சன் (23) ஆகியோர் செல்வராஜை கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் தந்தை மகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














