தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 86 பட்டாலியன் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர் வந்துள்ளனர். நேற்று மார்த்தாண்டம் போலீசுடன் இணைந்து, மார்த்தாண்டம் பேருந்து நிலையம் தொடங்கி குழித்துறை பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர். பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.














