மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.42 கோடி மதிப்பில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் – இப்பணிகளை விரைந்து முடித்து, மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார். பள்ளி தலைமையாசிரியர் சிவராம் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.