குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மற்றும் 8ம் கொடை விழா நடந்து முடிந்தது. நேற்று மீனபரணி கொடை விழாவை முன்னிட்டு பொங்கல் விழா, நள்ளிரவு 12 மணிக்குள் முக்கிய வழிபாடான வலிய படுக்கை என்ற மஹா பூஜை நடந்தது. அம்மனுக்கு பிடித்தமான உணவு வகைகள் படைத்து வழிபடும் இந்த பூஜை முடிந்து, இன்று (23-ம் தேதி) காலை படைக்கப்பட்ட பொருட்கள் பிரசாதங்களாக வழங்கப்பட்டன.














