மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் கல்குளம் தாசில்தார் சுனில், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரெஜி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர். விலை பட்டியல் வைக்காத கடைகளுக்கு அறிவுறுத்தலும், உணவுப்பொருட்கள் சுகாதாரமாக விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.














