நாகர்கோவிலில் நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.

0
256

நாகர்கோவிலில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், திட்ட பணிகளுக்கு சார் ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கிரிதர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் வைகுண்டராஜன், வினோத் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here