Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு வாலிபர் கைது

குமரி: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு வாலிபர் கைது

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கலைஞன் (44) என்பவர் பாறைக்காமடத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கோட்டார் செட்டி தெருவைச் சேர்ந்த ராம்கி (23) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 200 பணத்தைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கலைஞன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராம்கியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version