குமரி: செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாயமான இளம்பெண்

0
177

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சிக்கந்தர் பாதுஷாவின் 19 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணாததால், தந்தை கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here