கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆலம்பாறை பகுதியில் நேற்று காலை தொழிலாளி ராஜேஷ் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாவட்ட வன அலுவலர் அன்பு நேரில் சென்று ராஜேஷை பார்வையிட்டு, வனத்துறை சார்பில் 5000 ரூபாய் உதவி வழங்கினார். காயத்தின் தன்மைக்கேற்ப உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.














