சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு குமரி மாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பின் சார்பில் நேற்று களியக்காவிளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விளவங்கோடு வட்டார தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகி ஜாண்ரோஸ் வரவேற்றார். நெய்யாற்றின்கரை தொகுதி எம்எல்ஏ ஆன்சலம் துவக்கி வைத்துப் பேசினார். சாமித்தோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் மற்றும் மாநில மத நல்லிணக்க இயக்க துணைச் செயலர் ஏ. ஹலீல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.














