தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட் ஷோவில் பங்கேற்கிறார். மேலும், முதல்வர் பாஜகவைக் கண்டு அஞ்சுவதாகவும், அவரது முன்னாள் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாகவும், பல அமலாக்கத்துறை வழக்குகள் உட்பட பல வழக்குகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.














