கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலையை சேர்ந்த பிரபுராஜ் (34) என்பவர், குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவி ஷைலஜாவுக்கு அவரது தாய் காரணம் என நினைத்து தகராறு செய்தார். இதை தட்டிக் கேட்ட அண்ணன் மணிகண்டன், பிரபுராஜை கம்பியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர்.














