சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, இன்று 14ஆம் தேதியும், நாளை 15ஆம் தேதியும் குமரி மாவட்டத்தில் கனிம வள வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














