மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து, குளச்சல் அண்ணா சிலை முன்பிருந்து பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை வரை காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ, விஜய் வசந்த் எம் பி, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், தாரகை கத்பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














