களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் இருந்து 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தல் காரையும், ரேசன் அரிசியையும் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அரிசியை காப்புக்காடு அரசு நுகர்வோர் வணிப கிடங்கிலும், வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.














