தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.














