திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீபம் தொடர்பாக முகநூலில் நண்பரின் கருத்துக்கு பதிலளித்த பைங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதற்கு எதிர் கருத்தாக தனது மகளுடன் இருக்கும் படத்தை ஆபாசமாக வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் பரிந்துரையின் பேரில், குளச்சல் மகளிர் போலீசார் ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
