கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி தனித்து போட்டியிடாது என்றும், நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்றும், அதில் தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.














