முஞ்சிறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தூத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மாற்றுக் கட்சியினர் ஏராளமானவர்கள் திமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். தகவல் தொழில்நுட்ப அணி கிள்ளியூர் தொகுதி பொறுப்பாளர் அபிலாஷ் மற்றும் பலர் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒருங்கிணைத்தனர்.