அருமனை பகுதியைச் சேர்ந்த சுதர்சிங் (50) என்ற தொழிலாளி, விபத்தில் சிக்கிய நண்பரைப் பார்க்க பைக்கில் சென்றபோது, சிராயன்குழி அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














