ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில், உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் டிரைவர் கண்ணன் (47) என்பவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. கோவில்புரம் பகுதியைச் சேர்ந்த இவர் திருமணமாகாதவர் என தெரிய வந்துள்ளது. இக்கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.














