அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மார்ச் 14 ஆம் தேதியும், தென்காசி மாவட்டத்தில் மார்ச் 7 ஆம் தேதியும் வேலை நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.














