சட்டமன்ற தேர்தலையொட்டி 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியில் பங்கேற்றனர். இது வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.














