நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக (வணிகம்) இருந்த ஜெரோலின் தூத்துக்குடி மண்டலத்திற்கு துணை மேலாளராக (டெக்னிக்கல்) மாற்றப்பட்டுள்ளார். மேலும், நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக இருந்த சுனில் குமார் மண்டல வணிக பிரிவு துணை மேலாளராகவும், நாகர்கோவில் மண்டல உதவி மேலாளர் பொறுப்பில் இருந்து மகேஷ் (வரி மற்றும் பெர்மிட்) நாகர்கோவில் மண்டல உதவி மேலாளராக (வணிகம்) மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளன.