கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வனத்துறை பெண் அதிகாரியின் 3 சவரன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிய வடமாநில தொழிலாளியை காவல் துறையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வனத்துறை உதவி பாதுகாவலர் திவ்யா, தனது கணவருடன் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தபன்குமார் பாரிக் என்பவரை கைது செய்து நகையை மீட்டனர்.














