கோடை காலத்தில் வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியில், வெப்பச்சலனத்தால் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அருவிக்கு வருகை தந்துள்ளனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டும் இந்த அருவி, தற்போது மீண்டும் உற்சாகத்துடன் காட்சியளிக்கிறது.
