குளச்சல் அருகே மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ.எல். மத்திய அரசு நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 63.69 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், ஐ.ஆர்.இ.எல். முதன்மை பொது மேலாளர் மற்றும் ஆலைத் தலைவர் செல்வராஜ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மில்லிங் டேனியோவிடம் இந்த உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.














