கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(29). இவர் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஆவார். இவர் அவரது உறவினரின் இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்திருந்தார். வீட்டின் முன்பு வைத்திருந்த அந்த வாகனத்தை இரவு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.