சைமன் காலனி கடற்கரை பகுதியில் ராஜம் என்பவரது 15, 8 வயது மகன்கள் கடந்த 2023-ல் மாயமானார்கள். சிறுவர்கள் கடலில் தவறி விழுந்து இறந்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த ராஜம், மாவட்ட எஸ்பி, கலெக்டரிடம் புகார் கூறியிருந்தார். சைமன் காலனி ஊராட்சியில் நடந்த கிராம கூட்டத்தில் மனு அளிக்க சென்றபோது, ஊழியர்கள் வாங்க மறுத்து, கூட்டத்திற்குப் பிறகு ராஜத்தை அலுவலகத்தில் பூட்டிவிட்டுச் சென்றனர். ராஜம் அவசர போலீஸ் 100 எண்ணில் தொடர்பு கொண்டு, போலீசார் அவரை மீட்டனர்.














