2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. வினோத் மற்றும் பிற அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.














