பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளிடம் கனிவுடன் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் மில்லிங்டோனியா, செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
