நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த கில்ஜின் பிரைட் மற்றும் அவரது மனைவி பெக்லின் பென் ஆகியோர், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட ஏழு பேரிடம் இஸ்ரேல் வேலைக்கு விசா பெற்றுத் தருவதாகக் கூறி 21 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுள்ளனர். பின்னர் விசா வழங்காமல் ஏமாற்றியதோடு, பணத்தைத் திரும்பக் கேட்டபோது மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீசார் நேற்று கணவன்-மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
