நேசர்புரம் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான ராஜஷீலா (36) தனது கணவருக்குச் சொந்தமான சொத்தைப் பராமரிக்கச் சென்றபோது, கணவரின் உறவினர்களான ஜெயக்குமார் மற்றும் தங்கம் ஆகியோர் அவரைத் தடுத்து, திட்டி, தாக்கி, மிரட்டியுள்ளனர். இதய நோய் காரணமாக கடந்த 2020ல் ராஜஷீலாவின் கணவர் வினோ இறந்துவிட்டார். இது குறித்து ராஜஷீலா அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீசார் ஜெயக்குமார் மற்றும் தங்கம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














