நாகர்கோவிலில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச்செயலாளர் வேலு மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.














