கொல்லங்கோடு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபின் (32) நேற்று மதியம் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சஜின் (30) என்பவர் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரபின், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.














